அன்பே கொஞ்சம் காதல் கொடு 1-5

அன்பே கொஞ்சம் காதல் கொடு 1-5

அன்பே! கொஞ்ச(சு)ம்காதல் கொடு.

                               -அகிலா ஐசக்                                                                                                                       

அத்தியாயம்-1

சென்னை நகரில் அது ஒரு அழகான தனி வீடு.வண்ண விளக்குகளோ, அலங்காரமோ போன்ற எந்த ஆர்ப்பட்டமும் இன்றி அமைதியாக இருந்தது அந்தவீடு, திருமண வீட்டிற்கான எந்தவிதமான சத்தமோ சந்தடியோ இன்றி இருந்தது.

அந்த வீட்டின் மேலே மாடியில் உள்ள அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு அறையில் காத்திருந்தான் அவன்.

ஆசையோடு அல்ல நெஞ்சுமுட்டக் கோபத்தோடு. பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்திருந்தான்.

மறுபடியும் அதே சடங்கு முறைகளா என்று வெறுத்துபோய் உட்கார்ந்திருந்தான்.

வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முறைதான் என்ற ஒழுக்ககோட்பாடுகள் நிறைந்தவன். அதனால்தான்... விதி அந்தக்கோட்பாட்டை மீற வைத்திருந்தது அவனை.

ஏற்கனவே ஒரு தடவை அன்பை எதிர்பார்த்து காயப்பட்ட மனசு வேறு உண்மையான அன்போ காதலோ தன்னை தேடிவரும்போது நிராகரிக்கும். இது இயற்கையான உள்ளுணர்வு ...பயம், எங்கே மறுபடியும் காயப்பட்டிருவோமோ என்ற மனதின் தற்காப்புச் செயல் அது, அந்த நிலையில்தான் இருந்தான் கதிர்.

இந்த திருமணம் அவனின் பெற்றோருக்காக ஒத்துக்கொண்டது. அதனால் எல்லா கோபத்தையும் அடக்கிக்கொண்டு இருந்தான்.

மெல்லிய கொலுசின் ஒலி அவனுக்கு இன்பமாக இல்லை நாராசமாக ஒலித்தது. திரும்பி பார்த்தான் அவள் அவனருகில் வந்துக்கொண்டிருந்தாள்.

கைகளில் வழக்கமாக கொண்டு வரும் பால் செம்பு அவளோட கையில் இல்லைங்க... அது ஏற்கனவே பெரியவர்களால் அங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டுவிட்டது.

பொண்ணு வெட்கப்பட்டு தலைகுனிந்து வந்தது என எனக்கும் எழுத ஆசைதாங்க ஆன நம்ம நாயகி அப்படி அல்ல.

வந்தவள் என்ன மாம்ஸ் இப்படி உட்கார்ந்திருக்கீங்க.

என்ன பார்த்ததும் "கெட் அவுட் ஃபிரம் மை கிளாஸ் என எப்பவும் சொல்ற மாதிரி. அதே மாடுலேஷன்ல கெட் அவுட் ஃபிரம் மை ரூம் என சொல்லுவீங்க என எதிர்பார்த்தேன், சொதப்பிட்டீங்களே" என்றவளின் முகம் மலர்ந்திருந்தது...இந்த திருமணம் தந்த மலர்ச்சி அது.

இதைக்கேட்டதும் அவன் முகம் அதிர்ச்சியைக் காண்பித்தது. அவன் அதைத்தான் சொல்ல வந்தான் போலும், எப்படி சொல்ல முடியும். அப்புறம் அதுக்கும்...நீங்க எனக்கு தாலிகட்டிருக்கீங்க மாம்ஸ்னு சொல்லுவா. எரிச்சலை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

"என்ன என் மாம்ஸ்க்கு வயிறு சரியில்லையா. முகம் அப்படி போகுது"என்று கேட்கும்

இவ தாங்க நம்ம கதையின் நாயகி

நிலானி.

நண்பர் பட்டாளத்திற்கு அவள் நிலா,வீட்டில் அம்மு. எம்.எஸ்ஸி வேதியியல் இறுதி ஆண்டு மாணவி.

அவக்கிட்ட முதலிரவு அன்றே மொக்க வாங்கிக்கொண்டிருக்கும் நம்ம ஹீரோ பெயர் ஆரன்இளங்கதிர். நிலா படிக்கும் அதே கல்லூரியில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் பேராசிரியருங்க.ஆனா கெமிஸ்ட்ரி பாடம் மட்டும்தான் வரும். பெண்களிடம் கெமிஸ்டி அவுட் ஆஃப் போக்கஸ் நிலைதான்...

இந்த பொண்ணுங்க பையனுங்க கெமிஸ்ட்ரி மட்டும் அவருக்கிட்ட ஒட்டவே ஒட்டாதுங்க. அதனாலதான் இரண்டும் முறைச்சிஃபைங்க்.

அவக்கிட்ட மொக்க வாங்கிட்டு கோவத்துல தலையணை எடுத்து அறையின் அந்தபக்கம் இருக்கும் சிட்வுட்டில் போயி படுத்துக்கொண்டான்.

"மாம்ஸ் இந்த பாலை குடிக்கலையா? இதை குடிச்சிருங்க என் மேல எப்ப வேணாலும் கோபப்பட உங்களுக்கு ஆல் ரைட்சும் கொடுத்தாச்சி. அதனால இப்போ கோபம் விட்டு பாலைக் குடிங்க" என சொன்னவள் பாலை அவனுக்கு குடிக்கும் பதத்தில் கொடுக்கவும், அதை வாங்கி படபடவென குடித்து அவள் கையில் டம்பளரை குடுக்கவும், அதில் மீதியிருந்த சொட்டுக்களை தன் வாயைத்திறந்து ஊற்றிக்கொண்டாள் அதையும் அவனை பார்த்துக் கொண்டே.

அதை பார்த்திருந்த கதிர்தான் ஜெர்க் ஆனான். தன் புருவங்களை உயர்த்தி “என்ன மாம்ஸ்” என்று கேட்க அவன் அவசர அவசரமாக கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.

நிலாவிற்கு சிறிது வருத்தம் மனதை தேத்திக் கொண்டாள்...

இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்ததுதான வந்த அப்புறம் ஒய் ஃபீலிங்க் பேபி என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

படுக்கைக்கு வந்தவள் படுத்து தூங்கு என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பெட்டில் படுத்தாள் ஆனாலும் தூக்கம் வரவில்லை.

மெதுவாக எழும்பியவள் கதிர் படுத்திருக்கும் இடத்திற்கு சென்று அவனருகில் அமர்ந்து பார்த்தாள் அவன் ஆழ்ந்த தூக்கத்தில்.

அவனை கண்ணெடுக்காமல் ரசித்தாள். பார்த்த முதல் நாளில் கம்பீரமான ஆண், அவனின் கண்ணியமான பார்வை என ரசித்தவள்.

இப்பொழுது தனது கனவன் தன் காதலன் என்று ரீதியில் வேறு ரசனையோடு பார்க்க ஆரம்பித்தாள்.

"ஏன் மாம்ஸ் நம்ம இரண்டுபேரும் நல்ல விதமா சந்திச்சிருக்க கூடாதா.

வாழ்க்கை எவ்வளவு நல்லா இருந்திருக்கும். வயசுல என்ன மாம்ஸ் இருக்கு பத்து வயசு வித்தியாசம் ஒன்னுமே இல்லை" என்றவள்... அவன் முறுக்கு மீசையை தொட்டுப்பார்த்தாள்.

மெதுவாக அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தவள் அரவமின்றி திரும்பி வந்து படுத்துக் கொண்டாள்.

அவள் சென்றதும் கதிர் கண்விழித்தவன் அவன் கன்னத்தை தொட்டுப்பார்க்க அதில் அவள் உதட்டின் ஈரம்...மெதுவாக சிரித்துக்கொண்டவன்.

கதிர் நிலாவை முதன் முதலில் பார்க்கும்போது பள்ளி இறுதி முடித்து நிற்கும் இளங்குமரியாக சிறுபிள்ளை முகமாக மாம்ஸ் என்று இவனை கலாய்த்து அவன் கல்யாணத்தில் குதுகலமடைந்தவள். இன்று அவனின் மனைவியாக அருகில். அந்தவீட்டில் அவன்மேல் அபரிமிதமான பாசத்தைக் காட்டிய சிறுபெண்ணாக மனதில் பதிந்தவளை எப்படி மனைவியாக ஏற்க.

நிலாவை அவனுக்கு ரெம்ப பிடிக்கும் எல்லா கைகளும் அவனை நேக்கி குற்றம் சுமத்த உயர்ந்த போது தன்னை காப்பதற்காக தனது கைகளை கொடுத்தவள் அல்லவா.

இல்லையென்றால் கதிரின் கோவம் அவளை இதற்குள்ளாக சுட்டுப் பொசுக்கி அவளை சுக்கு நூறாக உடைத்திருக்கும். அவனின் நாக்கு எதிரில் இருப்பவர்களை சுழன்றடிக்கும் சாட்டை.

முதலில் இருந்த கதிர் அப்படியல்ல..

கடந்த நான்கு வருடங்கள் அவனை அவ்வாறு பாறையாக இறுக வைத்திருந்தது.

அந்தபாறையில் சிறு செடியான நிலாவை மட்டும் அனுமதித்தான். அது வளர்ந்து அதின் வேர்கள் அவனை இளக வைக்கும் என்பதை அறியாது.

இவர்களின் எண்ணப்போக்கு எதுவும் அறியாத கதிரவன் அவன் வேலையை சரியாக செய்தான்.

காலை ஆறுமணிக்கு வெளியே சத்தம் கேட்டு சிட்டவுட்டில் படுத்திருந்தவன் தலையணை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவன், பார்த்தது அவளது ஆடை முழங்கால் வரை ஏறியிருந்தது.

வாய் மட்டும் அடுத்த தெரு வரைக்கும் பேசறது ஒழுக்கமா படுக்க தெரியல. சின்ன பிள்ளையா இருந்திட்டு இது நம்மகிட்டயே வம்பு இழுக்குது.

என போர்வைய எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு போயிட்டான்(மானங்கெட்ட மனசு சொல்லுச்சு உனக்கு கல்யாணம் ஆகமலயே இருந்திருக்கலாம். அவன் அவன் பொண்ணு கிடைக்காம அலையுரான்.தூ என மூஞ்சியிலயே துப்பியது)

தலைய வேகமாக அசைத்து வெளிய

வர முற்பட. யோசித்தவன் மறுபடியும் வந்து கட்டிலில் அமர்ந்தவனின் அசைவில் எழுந்தவள் என்ன மாம்ஸ் என் கால் பக்கத்தில் உட்கார்ந்தகருக்கீங்க.

கதிர் "ஹான், எனக்கு வேண்டுதல்"

நிலா "ஓ அப்போ சரி,என்ன வேண்டுதல் மாம்ஸ் எத்தனை பிள்ளைங்க வேணும்னா மாம்ஸ்"

கதிர் கடுப்பாயிட்டான், திரும்பி அவளைப்பார்த்து பல்லைக் கடித்தவன்.

"உன் வாய எப்படி மூடுறதுன்னு வேண்டிக்கிட்டிருந்தேன்"

நிலா "ஐயோ மாம்ஸ் அதுக்கு எதுக்கு கடவுள்கிட்ட வேண்டுனீங்க.

அத நீங்க நினைச்சாலே செய்யலாம் என அவன் உதட்டை பார்க்க"

கதிர்"அடிங்க"என எழுந்து அவளை அடிக்கவர ஓடிப்போயி பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

கதிர் தான் நினைத்தான் 'ஒரு நாளைக்கே சாமாளிக்க முடில 'என விழிப்பிதுங்கினான். அவனுக்கு பயம் அவன் போட்டிருந்த கோபக்காரன் என்ற வேலியை உடைத்திடுவா போலவே என.

இருவரும் குளித்து வெளியே வந்து சாப்பிட அமரவும், கதிரின் அம்மா சித்ரா அவனிடம் நிலா வீட்டிற்கு போகனும் அங்க விருந்து இன்னைக்கு ரெடியாகுங்க.

கதிர் பாதி சாப்பாட்டில் அப்படியே கை உதறி எழுந்தான் "ஒரே வீட்டிற்கு இரண்டு தடவை மறுவீட்டுக்கு போகறது நானாதான் இருப்பேன்..

கேவலமா இருக்கு இது வரைக்கும் கேவலப்படுத்தினது போதும் இனி வேண்டாம், எனக்கு அங்க போக விருப்பம் இல்லை. நீங்க சொன்னீங்க கல்யாணம பண்ணியாச்சு. அங்க போ இங்க போ என கட்டாயபடுத்த கூடாது சொல்லிட்டேன்" பேசி முடித்து அறைக்குள் சென்றுவிட்டான்.

பெரியவங்க முன்னாடி அப்படி பேசினது நிலாவிற்கு கஷ்டமாக இருந்தது. அவளது கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.

அப்படியே அவளும் அறைக்குள் செல்ல அங்கு அவன் படுக்கையில் படுத்து கையை கண்களை மறைத்து வைத்திருந்தான்.

இவளும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள் அது அவளது வழக்கமல்ல.

அவளுக்கு கதிரை நினைத்துதான் வருத்தம் யாரோ இருவரின் சுயநலத்திற்காக இவர் வாழ்க்கையை பலிக்கொடுப்பதா.

நிலா "மாம்ஸ் விடுங்க உங்கள யாரும் கட்டாயப்படுத்தல. எனக்கும் போக விருப்பம் இல்லை. காதல் கல்யாணம் செய்தவங்க எல்லாம் மாமானர் வீட்டுக்கு விருந்துக்கா போயிட்டிருக்காங்க விடுங்க" என்றுக் கூறி வெளியே சென்றுவிட்டாள்.

அங்கு சமையலறையில் நின்று சித்ராவிற்கு உதவிக்கொண்டிருந்தாள். ஆனால் சிந்தையோ கதிரை சுற்றி இருந்தது .

கதிருக்கோ வேண்டம் என்று சொல்லியும் கேட்காம இப்படி சூழ்நிலைய கொண்டு வந்துட்டாளே என நிலாவை பற்றிய சிந்தனை.

இருவரின் எண்ணங்களும் வெவ்வேறு திசைகளில் அவர்களை ஒன்றினைத்ததே விதியின் சதியா ....

அத்தியாயம்-2

கதிர் தன் அறையில் கட்டிலில் சென்று கோபமாக படுத்திருந்தான். அவன் கைகளை மடக்கி தன் நெற்றியில் வைத்திருந்தான் நிறைய யோசித்தான்,கொஞ்சம் பழைய நியாபகங்களும் அவனை வருத்த,அப்படியே எவ்வளவு நேரம் படுத்திருந்தானோ எழுந்து மணி பார்க்க நேரமாயிற்று இன்னும் சிறிது நேரம் இருந்தவன்.

ஒரு பனிரெண்டு மணிவாக்கில் எழுந்து  

தன் அம்மாவை மாடியில் நின்றே அழைக்கவும் அவரும் எட்டிப்பார்த்து என்ன என்று அங்கிருந்தே கேட்டார்.

கதிர் "உங்க மருமகளை கொஞ்சம் மேல வரச்சொல்லுங்க" என்க. நிலாவும் அதே நேரத்தில் இவனின் சத்தம்கேட்டு அடுப்படியிலிருந்து வெளிய வந்து மேல எட்டிப்பார்க்க கதிர் தன் கை செய்கையால் மேல வா என்றான். 

அவள் அவனை தலையை சரித்து பார்க்கவும் அறைக்குள் சென்றுவிட்டான். அவன் அழைத்து அரைமணிநேரம் கழித்தே வந்தாள். 

அறைக்குள் வந்தவள் அங்கயும் இங்கயும் எதையோ எடுத்துக்கொண்டு

நடமாடிக்கொண்டிருந்தாள்.

கட்டிலில் இருந்து எழும்பியவன்

"நான் உன்ன கூப்பிட்டு எவ்வளவு நேரமாச்சுது. இவ்வளவு நேரங்கழித்து வந்திட்டு ரூமை அளந்து நடந்திட்டு இருக்க"

நிலா"அப்படியா மாம்ஸ், எப்போ கூப்பிட்டீங்க எனக்கு கேட்கவேயில்லை"

கதிர் சொன்னான் “அம்மாகிட்ட உன்னை மேல வரச்சொல்லுங்க என சொல்லும்போது நீயும் கேட்டதான.”

"ஓ இதுதான் உங்க ஊருல மனைவிய கூப்பிடுற அழகா எனக்குத் தெரியாம போச்சுதே மாம்ஸ்" என்று சொல்லவும் அவன் அப்படியே கட்டிலில் மறுபடியுமாக அமர்ந்தான்.

" மாம்ஸ் நேத்தே தாலிக்கட்டி அக்னி சாட்சியாக நீதான் என் மனைவி,

என்னோட சரிபாதி என ஊரறிய சொல்லியாச்சுது.

இந்த தலைய சுத்தி மூக்கத்தொடுற வித்தையெல்லாம் நமக்கு சரிப்படாது.

அது என்ன அத்தைய கூப்பிட்டு உங்க மருமகள மேல வரச்சொல்லுங்க அப்படிங்கறது. ஏன் நேரடியா என் பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்கலாமே?

உங்ககிட்ட மட்டுந்தான் மரியாதை என்ன விலைன்னு கேட்கறதில்ல. அதுக்காக எல்லார் முன்னாடியும் அப்படி இருக்கமுடியாது.

அங்க உங்க சொந்தங்களும், உங்க தங்கை வீட்டிலயும் இருக்காங்க என்ன நினைப்பாங்க.ம்ம்.

அதவிட முக்கியம்” என சொல்லி நிறுத்தியவள். அவனை உரசிக்கொண்டு ஆட்காட்டி விரலை வைத்து அவனையும் இவளையும் சுட்டிக்காட்டி “இடையில யாரும் வரக்கூடாது. இப்போ சொல்லுங்க என்ன விசயம்.”

அவள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் சிறுபெண் என்று நினைத்தோம். என்ன ஒரு தெளிவு அவளுக்குள் என வியந்தவன் அது வெளியே காண்பித்துக் கொள்ளாமல் 

"கிளம்பு உங்க வீட்டு விருந்திற்கு போயிட்டு வரலாம்"

"ஹான் என்ன அங்க விருந்துக்கு போகப்பிடிக்கலை என கோவத்துல வந்தீங்க. இப்போ என்ன போகலாம் அப்படிங்கறீங்க" என்ன விசயம் என்ற கேள்வி தொக்கி நிற்க.

இனி இவள பேசவிட்டா சரியாகாது என நினைத்தவன் "கிராஸ் கேள்வி கேட்காத உங்கவீட்டிற்கு போகனும்னா கிளம்பு" என்றான். சரி என தலையசைத்தவள் மறுபடியுமாக உடையை மாற்றி வரவும் தானும் உடை மாற்றி வந்தான்.

இருவரும் கிளம்பி கீழே சென்றதும் கதிர் அவன் அம்மாவிடம் பேசி நிற்கவும்.

காத்திருந்தவள் வீட்டின் கீழ் அறைகளில் ஒன்றிற்குள் நுழைந்தாள், அவனும் அவளோடு இணைந்து உள் சென்றான்.

அங்கே கட்டிலில் படுத்திருந்த கதிரின் அப்பா வேதநாயகம் நிலாவைக் கண்டதும் சிரித்தமுகமாக ஒரு கையை ஊன்றி எழும்ப முயற்சிக்க...

கதிருக்கு முன்பாக அவள் ஓடிச்சென்று அவரைத்தாங்கி தூக்கி கட்டிலில் சாய்த்து அமர வைத்தாள்.

திக்கித்தினறி சாப்பிட்டீங்களா?எங்க கிளம்பியாச்சு? எனக்கேட்டார். 

அவருக்கு ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பாக பிரஷர் ஏறி ஒருபக்கமாக கைகால் செயலிழந்து கொஞ்சம் பேசமுடியாமல் போயிற்று.

நிலா "கதிரை கைகாட்டி இவங்க மாமனார் வீட்ல விருந்துக் கொடுக்குறாங்களாம் போகனும்னு அடம்பிடிச்சி என்னையும் கூட அழைச்சிட்டுப் போறாங்க" என சொல்லவும் வேதநாயகம் சிரித்துவிட்டார். போயிட்டு வாங்க சந்தோசமா என தலையையும் அசைத்து சொன்னார்.

கதிர் போயிட்டு வர்றேன்பா என தன் தொண்டைகமற சொல்லவும், நிலா அவரின் கால்களை தொட்டு வணங்கி போயிட்டு வர்றேன் மாமா என சொல்லி அங்கிருந்து வெளியே வந்தனர். 

இப்போது கதிரின் முகம் பாறைபோல் இறுகியிருந்தது. அவள் அவன் பைக் எடுத்திட்டு வருவான் என்று காத்திருக்க 

அவன் கார் எடுத்து வந்து அவளின் முன்னே கொண்டு விட்டான்.

அவள் முன்பக்க கதவைத் திறந்து அமரவும் காரை எடுத்தவன் எதுவுமே பேசவேயில்லை. வழியெங்கும் இருவரும்

அமைதியாகவே வந்தனர்.

நிலாவின் வீடு வந்ததும் காரை வெளியவே நிறுத்தியவன் மனைவியைப் பார்க்க, மெதுவாக இறங்கியவள் அவன் வரும் வரைக்கும் காத்திருந்து ஒன்றாக கேட்டைத் திறந்து உள்ளே சென்றனர்.

அவர்களைப் பார்த்ததும் நிலாவின் அப்பா

வந்து வாங்க என்ன நடந்து வர்றீங்க 

என்று கேட்கவும்.

கதிர் "கார்ல பைக்ல வந்தாதான் உங்க வீட்டுக்குள்ள போக அனுமதி கிடைக்குமா" என்று முகத்திலடித்தார் போல கேட்டுவிட்டான்.

"ச்ச அப்படியில்ல பிள்ளை நடந்து வர்றாளேன்னு கேட்டேன் மாப்பிள்ளை நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க"

நிலா "அப்பா கார்லதான் வந்தோம் கார் கேட்டுக்கு வெளிய விட்டிருக்கோம். 

வாங்க உள்ள போகலாம்” என்று கதிரை அழைத்து உள்ளே சென்றாள்.

அதற்குள்ளாக எல்லோரும் அவர்களை வந்து வாங்க என அழைத்து நலம் விசாரிக்கவும், நிலாவின் அண்ணன் சித்தார்த் வந்து “வாங்க” என அழைக்க கதிர் கண்டுகொள்ளவே இல்லை ஒரு தலையசைப்பைக்கூட கொடுக்கவில்லை.

யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கையில் அமர்ந்தவன் கால்மேல கால்போட்டு தோரணையாக இருந்தான். எல்லாரும் அவனைத்தான் பார்த்திருந்தனர். முகத்தில் மருந்திற்குகூட சிரிப்பில்லை.

வெறும் வெற்றுப்பார்வை பார்த்திருந்தான் மாப்பிள்ளை முறுக்குலாம் இல்லங்க. செய்த செயலுக்கான எதிர்வினை சில வருடங்களுக்கு பிறகு திருப்பிக்குடுக்குறான்.

நிலாவின் அம்மா ஜோதி அவளைத் தனியாக அழைத்து சென்று "எப்படி டி இருக்க மாப்பிள்ளை எதுவும் பேசுனாங்களா, உன்ன நல்ல பார்த்துக்கிட்டாரா, உன்கிட்ட எப்படி நடந்துக்குறாரு " என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கவும்,நிலா என்னம்மா கேட்கிற அவங்க எங்கிட்ட நல்லாதான் நடந்துக்குறாங்க. 

உங்களுக்கு இப்போ என்னத்தெரியனும்?

ஜோதி "நான் கேட்கறது உனக்கு புரியலையா! பழச எதுவும் மனசுல வச்சிட்டு உன்ன எதுவும் கஷ்டப்படுத்துறாரா, இல்ல எதுவும் பிரச்சனை பண்றாரா "

நிலா தன் தலையில் அடித்துக்கொண்டு 

"பிரச்சனைனா இன்னும் நீங்க அவரத் தப்பாதான் நினைக்கிறீங்களா, உங்க புத்தியெல்லாம் மாறவே மாறாதா,

அவர் ஒன்னும் மோசமானவரு இல்லை, உங்களவிடலாம் நல்லவருதான்" என காட்டமாக பதில் சொன்னாள்.

ஜோதி "எங்க மேல உள்ள கோபத்தை உன்கிட்ட காமிச்சிட்டாரோனு கேட்டேன்டி, என் மகளோட வாழ்கை நல்லாயிருக்கா அப்படின்னு கேட்குறேன் அதுக்கு ஏன் இப்படி கோவப்படுற" என்று வருத்தப்பட்டார்.

நிலா "எப்படி நீங்க செய்தீங்களா அப்படியா, காரண காரியங்களை கேட்காம கஷ்டப்படுத்தி, அடிச்சி காயப்படுத்தினீங்களே அப்படியா கவலையே படாத மாமா அப்படியெல்லாம் பண்றதா இருந்தா நம்மள எப்பவோ செய்திருக்கலாம். அவங்க மனசாட்சி உள்ளவங்க கொஞ்சூண்டு நல்லவருங்கூட" என்று கோபத்தில் அம்மாவிடம் எதிர்த்து பேசிக்கொண்டிருந்தாள்.

அவளின் அத்தைதான் விடு ஜோதி நீயும் பேசுற அவளும் எதிர்த்து பேசிட்டு இருக்கா. விடு நம்ம பிள்ளை சந்தோசமா நல்லா இருக்கானு சந்தோசப்படு.

வந்த பிள்ளைக்கு குடிக்க ஒன்னும் குடுக்காம பேசிட்டு இருக்க. போயி பலகாரம் எடுத்து குடு என்று சத்தம் போடவும் இருவரும் அமைதியாகினர்

ஜோதி கிட்சனுக்கு சென்று எல்லாம் எடுத்து வைக்க சென்றார்.

நிலா நினைத்துக்கொண்டாள். சாப்பாடு பலகாரமா பச்சத்தண்ணிக்கூட இங்கயிருந்து குடிக்கமாட்டார் மாம்ஸ்.

அவங்க வந்தது எனக்காகவா இருக்கனும் இல்லனா இவங்களுக்கு எதாவது பதிலடி தரவா இருக்கும். என்ன பேசப்போறாங்களோ என வெளியே வரவும்.

ஜோதி கொஞ்சம் பலகாரம் எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு வந்து அவனுக்கு வைக்கவும் அவன் அமைதியாக பார்த்தான்.

நிலாதான் அவசரமாக வந்து அம்மா நாங்க வீட்லயே சாப்பிட்டு வந்திட்டோம்.

நீங்க விருந்துக்கு சொல்லிட்டீங்க அதான் வந்தோம் சரி நாங்க கிளம்புறோம் என அவசரவசரமாக கிளம்ப போக. கதிர்தான் தடுத்தான்.

கதிர் "என்ன நிலா அவங்க எவ்வளவு ஆசையா விருந்துக்கு அழைச்சிருக்காங்க வா மாமனார் வீட்டு கவனிப்பு செமயா இருக்கு. அனுபவிச்சிட்டு வர்றேன் போன தடவை விருந்துக்கு வரும்போது இருந்ததை விட நாலு வருஷத்துக்குள்ளாக விருந்து உபசரிப்புலாம் மாறிட்டு. அப்போ இவ்வளவு கவனிக்கலையே"

நிலா கதிரின் பக்கத்தில் வந்து அடிக்குரலில் "மாம்ஸ் வேண்டாம் பழைய காயங்கள கிளற வேண்டாம் எல்லாருக்கும் வருத்தாம் வாங்க வீட்டுக்கு போகலாம்"

கதிர் அவள் பேசியதை கேட்டாலும், கண்டுக்காம பேச ஆரம்பித்தான்.

"பழைய விருந்திறாகும் புது விருந்திற்கும் ஆறு வித்தியாசத்தை கண்டுபிடிச்சிட்டு வர்றேன் நிலா" என்றான்.

எல்லாரும் ஸ்தம்பித்து நிற்கவும் அவன் மட்டும் அமர்த்தலாக இருக்கையில் அமர்ந்தவன் "அப்போ நாலு வருசத்துல என்னோட மதிப்பு ஏறிட்டு போல. கதிர் வாழ்றடா” என தனக்குத்தானே சபாஷ் போட்டுக்கொண்டான்.

அங்கிருந்த ஒருத்தருக்கும் ஒன்றும் பேசத்தோணவில்லை. நிலா தான் 

"மாம்ஸ்"

கதிர் "என்னடி மாம்ஸ். நான், எனக்கு பிடிக்கலன்னாலும் உனக்காகத்தானடி வந்தேன். உள்ள வரும்போதே உங்கப்பா கேட்டாரே என்ன நடந்தா வர்றீங்கனு.

அப்பவும் உங்கப்பா ஸ்டேட்டஸ்தான பார்த்தாரு. கார் உள்ள வரைக்கும்கொண்டு வந்ததான் என் ஸ்டேட்டஸ் தெரியுமோ"

அப்போ ஐம்பது பவுன் நகை குடுத்தீங்க. இப்போ நூறா மாறிடுச்சி அப்போ என் தரம் உயர்ந்திட்டுதான. என்ன பழைய அதே கதிரு என்ன பேசினாலும் கேட்பேன்னு நினைக்க கூடாதுல அதான் "

நிலாவின் அப்பா தென்னவன் பக்கத்துல வந்து என்ன மாப்பிள்ளை கோவம் விடுங்க நான் நீங்க நடந்து வராறீங்களே என கேட்டேன், வேற எந்த உள்நோக்கமும் இல்லை. எங்க பிள்ளை வாழ்க்கை எங்களுக்கு முக்கியம் நான் கேட்டது தப்புதான் மாப்பிள்ளை மன்னிச்சுருங்க"

நிலா "அப்பா, மாமா எதோ ஆதங்கத்துல பேசறாங்க. நீங்க மன்னிப்புலாம் கேட்க வேண்டாம் பா" என சொல்லவும்  

தென்னவன் "இல்லடா, யாருக்கிட்ட கேட்டேன். நம்ம மாப்பிள்ளைக்கிட்டதான. விடு"

கதிர் "இப்போ இந்த இடத்துல உங்க பொண்ண வேண்டாம்னு விட்டுப்போன என்ன பண்ணுவீங்க " ( சில சமயம் நாம் பேசுற வார்த்தைகள் அப்படியே பலிக்குமாம், இதை கதிர் அறிந்திருக்க வாய்ப்பில்லை ) 

திரும்பவும் எனக்கு விலை தருவீங்க பணமா பொருளா. உங்களால மனுஷங்களை பணத்தை வச்சித்தான எடைபோட முடியும். நாங்க அப்படியில்லை மனுஷங்க குணத்தை வச்சு தரம் பார்ப்போம். எப்பவுமே உங்களுக்கும் எனக்கும் ஒத்தே போகாது. இனி இங்க என்ன எந்த விதத்துலயும் அழைக்காதிங்க வரமாட்டேன்"என உறுதியாக சொன்னான்

நிலாவின் அண்ணன் கோவத்தில் கையை மடக்கி முன்னே வர தென்னவன் தடுத்துவிட்டார்.

 அதையும் கதிர் பார்த்துதான் இருந்தான் அவனை கொலைவெறியில் முறைத்தான் கதிர்

நிலா எதாவது பேசுவான்னு எதிர்பார்த்துதான் கூட வந்தாள். ஆனால் இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கல..

ஒரு நொடி கதிரை பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவளது அறைக்குள் சென்றவள் அவளுக்குத் தேவையானது எல்லாவற்றையும் எடுத்துவைத்தவள் வெளியே வர அங்கே கதிரும் அவளது அப்பாவும் அமர்ந்திருந்தனர்.

அவங்க எல்லோரையும் அழைத்தாள்.

அவள் கண்கள் கலங்கியிருந்தது

நிலா பேசத் துவங்கினாள் “நான் இனி இங்க வரமாட்டேன். என்னோட முக்கியமான பொருட்கள் எல்லாம் எடுத்திட்டேன். எல்லாம் சரியானாலும் ஆகலாம் ஆகமலும் போகலாம். அதனால என்னோட வாழ்க்கைக்காக உங்கிட்டயிருந்து விலகி நிக்குறேன்...”

நிலா யாருடைய முகத்தையும் பார்க்காமல் நடந்து வெளியேறி கார் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவனும் அவளது பின் வந்து பேக் எடுத்து பின் பக்கம் வைத்துவிட்டு காரை திறந்தான். முன்பக்கம் அமர்ந்தவள் கண்ணை இறுக முடி தலையை சாய்த்து அமர்ந்துவிட்டாள்.

கொஞ்சநேரம் அவளையே பார்த்தவன். அவளிடம் ஒரு அசைவும் இல்லையென்றவுடன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் சென்றதும் கார் நிற்கவும் அவள் வீடு வந்துவிட்டது என்று இறங்க முற்பட. கதிர் சொன்னான் வீடு இன்னும் வரல என்று, திரும்பி அவனை பார்த்தாள் அப்போ ஏன் இங்க நிறுத்துனீங்க என்ற பார்வையில்.

நம்ம இன்னும் சாப்பிடல அதான் ஹொட்டல்ல சாப்பிட்டு போவோம். அங்க நடந்தது எதுவும் அம்மாவிற்கு தெரிய வேண்டாம் .என்று இறங்கி நின்று அவளுக்காக காத்திருக்க அவள் இறங்கவில்லை, அதைவிட முன்பு எப்படி இருந்தாளோ அப்படியே கண்கள் மூடி அமர்ந்து இருந்தாள்.

காத்திருந்து பார்த்தவன் அவள் இறங்குற மாதிரியில்லை என்றவுடன் மறுபடியும் காரைக் கிளப்பி வீடு வந்து சேர்ந்தனர்.

நிலா நேராக மாடிக்கு சென்று பேக்கை வைத்துவிட்டு கட்டிலில் கவிழ்த்து படுத்துவிட்டாள்.

அவன் கிட்சனில் இருந்த பழங்களை எடுத்து வந்தான் அவனது அறைக்கு.

அவனுக்கு அது பிடிக்காத பழக்கம் 

நிலாவிற்காக இறங்கி வந்தான்.

பழங்களை வெட்டி எடுத்தக்கொண்டு தன் அறைக்கு வந்தவன் நிலா படுத்திருப்பதை பார்த்து வருத்தப்பட்டான்.

கதிர் மெதுவாக அவள் அருகில் சென்று நிலா என்று அழைக்க அவளிடம் அசைவில்லை.

அவளது தோளைதொட்டு கூப்பிடவும்  

எழுந்து அமர்ந்தவளின் கண்களில் அழுததிற்கான அடையாளம் ...

அத்தியாயம்-3

நிலாவின் கண்களைப் பார்த்ததும் கண்டுக்கொண்டான் அவள் அழுதிருப்பதை.

ஒன்றுமே செல்லாமல் தன் கரத்திலிருந்த பழங்கள் நிறைந்த தட்டை அவள் முன் நீட்டினான். அவள் கதிரின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.

கதிர் " சாப்பிடு பசியோட இருந்தா இன்னும் டென்சன், அழுகை, தலைவலி எல்லாம் வரும், வயிற்றை நிறை முதல்ல என தட்டை அவள் முன் நீட்டிக்கொண்டிருக்கவும்.

மெதுவாக பழங்களை எடுத்து சாப்பிட ஆரம்பிந்தாள், அவனும் எடுத்து சாப்பிட்டான்.

இரண்டுபேரும் சாப்பிட்டு முடிக்கவும் கதிர் பேசத்தொடங்கினான்.

கதிர் "உங்க வீட்ல அங்க யாரையாவது நான் திட்டினேனா, அசிங்கமான வாரத்தைகள் எதுவும் பயன்படுத்தினேனா"

நிலா இல்லை எனத் தலையாட்டவும்.

கதிர் "யாரையாவது கைநீட்டி அடிச்சனா"

நிலா மறுபடியும் தலையசைத்து இல்லை என்று பதிலளித்தாள்.

அப்புறமெதுக்கு இந்த அழுகை, அவங்க செய்த செயலுக்கான எதிர்வினை கிட்டதட்ட நாலுவருசம் கழிச்சு லேசா காட்டினேன். அதுக்கே உன் மனசு சுனங்கி அழுகை வருது.

என்னால அவங்க காயப்பட்ருவாங்கனுதான அவங்களை விலக்கி வச்சுட்டு வந்த என்றவன் அவள் கண்களைப்பார்க்க,

நிலாவின் கண்கள் கண்டுகொண்டானே என்று அலைபாய்ந்தது.

அவனது கண்கள் அவளை பார்த்து உன்ன நான் அறிவேன் என்ற பதில் உரைத்தான்.

கதிர் “காலையில் கீழ ஒரு மனுஷனை பார்த்தியே அவர் யாருக்கு என்ன கெடுதல் செய்தாருனு அவருக்கு இந்த தண்டனை, அவர் என்னைக்காவது இப்படி சும்மா படுத்திருக்கிறதை பார்த்திருக்கியா, அவர இந்த நிலையில் பார்க்க பார்க்க நெஞ்சில் இரத்தம் வருதே!  

இதுக்கு யாரை நான் விலக்கி வைக்கனும் உன்னையவா?” எனக்கேட்டு நிறுத்தினான்.

இந்த வார்த்தையைக் கேட்டு பதறியவள் "என்ன மாம்ஸ் என்னைய விலக்கி வைக்குறதுலயே குறியா இருக்கீங்க, மதியமும் அம்மாவீட்டுல வைத்தும் இப்படித்தான் சொன்னீங்க, இப்பவும் இதே வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்ன எவ்வளவு காயப்படுத்தும் என உங்களுக்கு தெரியாதா" என மீண்டும் கண்களில் கண்ணீர்.

கதிர் இதைக்கேட்டதும் கோபத்தை சிறிது கைவிட்டவன்.

அப்படியில்ல நிலா உன்ன காயப்படத்துறதுக்காக அந்த வார்த்தை பேசல, யோசிச்சு பாரு உங்க குடும்பத்தாலதான் இரண்டு வெள்ளந்தி மனுசங்க காயப்பட்டு, அத கொஞ்சங்கூட காமிச்சாக்காம நடந்துக்குறாங்க அவங்களையும் கொஞ்சம் யோசி..

அதற்குள் கீழ சத்தம் கேட்க இருவரும் இறங்கி சென்றனர்.

சித்ராதான் வெளியிலிருந்து வந்தார்.

நிலா கீழிறங்கி செல்லவும் சித்ரா நிலாவிடம் கேட்க ஆரம்பித்தார் "என்னடா விருந்துக்கு போயிட்டு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க, கதிர் எங்க"

நிலா "அது அத்தை மாம்ஸ்க்கு எதோ வேலை இருக்கு சீக்கிரம் போகணும் என கூட்டிட்டு வந்திட்டாங்க," என்று சொல்லியவள் கிட்சன் மேடையில் ஏறி அமரந்தவள் அவருடன் கதையளந்துக் கொண்டிருந்தாள்.

டீ போட்டு இரண்டு கப்பில் ஊற்றியவர் இந்தா கதிர் கீழ இறங்கி வந்துட்டான் அவனுக்கு கொண்டு குடு என்று அவளிடம் ஒன்றைக் கொடுத்தார்.

நிலா கொண்டுப்போகும்போது அவன் டீவியில் மும்முரமாக நீயூஸ் பார்த்திட்டிருக்கவும், அவன் முன் வைக்கவும் நிமிர்ந்து பார்த்தான். 

"மாம்ஸ் நான் டீ போடல அத்தை போட்டாங்க தைரியமா குடிங்க" என்றவள் அவளதை எடுத்துக்கொண்டு வெளியே வரண்டாவில் வைத்து குடிக்க ஆரம்பிக்கவும் அக்கம் பக்கத்திலிருந்து இரண்டு மூன்று பேர் வரவும் யாரு என முழித்தவள் அத்தை என்று கூப்பிடும் முன் அவர்களே சித்ராம்மா என அழைக்கவும் சித்ரா வெளியே வந்தார்.

சித்ரா எல்லாரிடமும் பேசிக்கொண்டிருந்தவர் கொஞ்சம் பலகாரம் எல்லாம் எடுத்துக்கொண்டுவந்து அவர்களுக்கு குடுத்து தானும் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

நிலாதான் ஆச்சர்யமாக பார்த்திருந்தார், இந்த சென்னை சிட்டிக்குள்ள யாரும் பக்கத்துலகூட பொதுவா பேசறதில்ல.

இவங்க என்னடான ஊர்ல இருக்குற மாதிரிய பிரண்ட்ஸ் பிடிச்சு வச்சுருக்காங்க என்று ஆச்சர்யப்பட்டாள்.

அதற்குள்ளாக டீ குடித்து முடித்தவள் உள்ளே செல்ல கதிரும் குடித்து முடித்து கப் அங்கயே வச்சிருந்தான். அத எடுக்குற சாக்கில் சுற்றும் முற்றும் பார்த்தவள் ஒருத்தரும் பார்க்கவில்லை என்றதும் கதிரின் முறுக்கு மீசையை நல்ல பிடித்து இழுத்துவிட்டு ஓடிவிட்டாள்.

கதிரின் ஆஆஆஆ.. என்று அலறல் சத்தம் கேட்டு முன்வாசலில் அமர்ந்திருந்து சித்ரா முதற்கொண்டு உள்ளே எட்டிப்பார்க்க.

ஒன்னுமில்லமா நாக்கை கடிச்சுக்கிட்டேன் நல்ல வலி அதான் கத்திட்டேன் என்று சொல்லி நிலா சென்ற திசையை பார்க்க அவள் கிட்சனின் மறைவிலிருந்து எட்டிப் பார்த்து நாக்கு துருத்தி காமிக்கவும்,

கதிர் மெதுவாக உள்ளே சென்றான், இவன் வருவான் என்று எதிர்பார்க்காதவள் இடுப்பில் சேலையை சொருகிக்கொண்டு மேல என்னவோ எக்கி எடுக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தாள்.

அப்படியே அவளை இடுப்பில் கைக்கொடுத்து சட்டென்று இறக்கியவன் அவள் வாயோடு வாய் வைத்து அழுத்தி துருத்திய நாக்கை கடித்து இழுத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

நிலாவிற்கு அதிர்ச்சி அப்படியே விழிகள் விரிய பார்த்தவள் அவனின் தாக்குதலில் தன் விழியிரண்டும் கிறங்க அவன் பின்னோடு கேசத்தை பற்றிக்கொண்டாள். 

அவளின் செயலுக்குபதில் கொடுக்க வந்தவன் இப்போது நாக்கோடு நாக்கை இணைத்து புதுவிதமாக அவனது கோபத்தை அழித்துக் கொண்டிருந்தான். இரு உடல்களும் நெருங்கியிருந்தன,

இருவருக்குமே இப்படியே ஒருவருக்குள் ஒருவர் புதைந்துவிட தோன்றியது.

அவனது கரங்கள் பெண்ணவளின் இடுப்பை இறுக்கிப்பிடித்து அவளை இன்னும் தன்னோடு நெருக்கிகொண்டிருந்தான், அவளது பெண்மை அவனது நெஞ்சின் திண்மத்தில் அழுத்தி அவளைதிக்குமுக்காட செய்துக் கொண்டிருந்தது.

அவள் விலக முயற்சிக்க கதிர் அவனது ஒரு கையால் அவளது கேசத்தைபிடித்து 

விலகவிடாமல் தடுத்தான்

அவளின் வாசம் தந்த மயக்கம் கதிரை இன்னும் ஆழமாக போகச்சொன்னது.

இப்போது அவளது இதழ்களை மெதுவாக பற்களால் பிடித்து கடிப்பதற்காக அழுத்த அதற்கே பெண்ணவள் கண்களில் கண்ணீர் முட்ட, அதைப்பார்த்தவன் கண்களால் என்ன என்று கேட்டு, மெதுவாக கீழுதடை விடுவித்தவன், மீசை இழுக்கும்போது வலிச்சுது அதுக்கு இது பதில் என்று அவளை விட்டு விலகி சென்றான்.

நிலா அப்படியே சிறிது நேரம் நின்றவள் சித்ரா வந்து ரெம்ப நேரம் கூப்பிட்டும் அசையாமல் நிற்க அதற்குள் கதிரும் சென்றவன் உள்ளே எட்டிப்பார்க்க,

சித்ரா அவளை அசைத்து என்னமா பேயடிச்சமாதிரி நிக்க என்று கேட்க.

கதிரை முறைத்து பார்த்து பேய் அடிக்கலத்தை, கடிச்சு வச்சுட்டு என்று சொல்லவும், கதிர் சிரித்துக்கொண்டே மேலே சென்றுவிட்டான்.

சித்ரா என்னமா என்று அவள் சொன்னது புரியாமல் நிற்க, ஒன்னுமில்லத்தை நீங்க சொன்னது திருப்பி சொன்னேன் என்றவள் அவருக்கு சமையறையில் உதவி செய்துக்கொண்டிருந்தாள் .

வேதநாயகத்தின் சத்தம் கேட்கவும் சித்ரா செய்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவரது அறைக்கு ஓடினார்.

நிலா மாமியாரையே கவனித்தாள் என்ன வேலை எப்படி இருந்தாலும் கணவனது சிறு அசைவிற்கு கூட அர்த்தம் கண்டுபிடித்துவிடுவார் எவ்வளவு புரிதல் .

மனதிற்குள் நினைத்தவள் நானும் மாம்ஸும் இப்படி இருப்போமா என்று சிந்திக்க தொடங்கினாள்.

மாமாவுக்கு மட்டும் இப்படி ஆகலைன்னா இங்கயா வந்திருப்பாங்க அவங்க ஊர்லயே இருந்திருப்பாங்க, எல்லாம் விதி என்று தன் சிந்தனையில் இருந்தவளுக்கு இப்போது சித்ராவின் சத்தம் கேட்டது.

சித்ரா கதிரை சத்தமாக அழைத்துக்கொண்டிருந்தார், கதிருக்கு கேட்கவில்லைப்போல நிலா அவசரமாக ஓடிவந்து எதுவும் செய்யனுமா என்க்கேட்க "மாமாவக் கொஞ்சம் தூக்கி உட்கார வைக்கனும்டா, அவனைக்கூப்பிடு” என்றார் 

தான் உதவி பண்றேன் என்று இருவருமாக அவரைக் கொஞ்சமாக சாய்த்து உட்கார வைத்தனர். அதற்குள் கதிர் இறங்கி வந்திருக்க  

நிலா "மாமாவ கொஞ்சம் வெளிக்காற்று படுற மாதிரி உட்கார வைக்கலாமா, அது அவங்களுக்கு நல்ல ஃபீல் கொடுக்கும்" என்றாள்.

கதிர் யோசித்தவன் சட்டென்று தன் தகப்பனை தோளில் தூக்கி வெளியே கொண்டுவந்தான் அதற்குள்ளாக நிலா சாய்வு நாற்காலியை எடுத்துபோட்டு அதில் தலையணையை சாய்த்து வைத்தாள்.

வேதநாயகத்தை அதில் கதிர் அமரவைக்கவும், அவரின் முகத்தில் அவ்வளவு ஒரு பிரகாசம், ரெம்ப நாளைக்கு அப்புறம் இப்படி வெளியே உட்கார்வது அவருக்கு அவ்வளவு சந்தோசம்.

கதிர் நிலாவைத்தான் பார்த்திருந்தான். இந்த யோசனை நமக்கு வரலையே என்று. ஏற்கனவே அவருக்கு நிலா என்றாள் ரெம்ப பிடிக்கும் அதனாலதான் திருமணத்திற்கு அவளை கைகாட்டியதும் கதிர் ஒத்துக்கொண்டான்.

அவர்கள் வீட்டில் பணத்தின் குணாதியசங்கள் ஒட்டாத ஒரே ஆள் நிலா மட்டுமே.

எல்லாரும் அப்படியே பேசி சிரித்துக்கொண்டிருக்கும்போதே. கதிரின் தங்கை இலக்கியா தன் கனவன் பிள்ளையுடன் வந்தாள்.

அப்பாவை வெளியில் பார்த்தும் அப்படியே ஓடிப்போய் கட்டிக்கொண்டாள். அவளுக்கும் கண்ணீர் வந்தது எப்படி இருந்த அப்பா, முடங்கி கிடக்கும்போது வரும் வேதனை சொற்களில் வடிக்கமுடியாது.

இலக்கியா நிலாவைவிட பெரியவள் வேதநாயகம் நன்றாக இருக்கும்போதே கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்.

பெங்களூரில் அவளது கணவனுக்கு வேலை அங்குதான் இருக்கின்றாள் மாமனார் மாமியார் சென்னையில் இருக்கின்றனர். நேற்றே அங்கு சென்றுவிட்டு இப்போதுதான் திரும்புகின்றனர்.

இரவு உணவு உண்டு முடித்ததும் இலக்கியா கதிரையும் நிலாவையும் அழைத்து "அண்ணா அண்ணிக்கு என்னோட சின்ன கிஃப்ட்"

என ஒரு சின்ன பார்சலைக்கொடுத்தாள்.

கதிர் அதை வாங்கிக்கொண்டவன் ரெம்ப நன்றிடா என்றதும், இலக்கியா அண்ணா அதை உடனே திறந்துப்பாரு என்று நிற்க, கதிரும் திறந்து பார்த்தான்.

அது கோவாவிற்கு ஹனிமூன் போவதற்கான எல்லாம் இருந்தது.

தங்கையின் முன் ஒன்றும் சொல்லாமல் நல்ல கிஃப்ட் என்று அதை நிலாவின் கையில் தந்தான்.

நிலா ‘போகாத ஊருக்கு டிக்கட்டும் ப்ளானுமா, உங்கண்ணனை பத்தி தெரியாம ப்ளான் பண்ணிட்டியேம்மா.’

என தன் மனதிற்குள் பேசிக்கொண்டாள்.

இலக்கியாவும் முன்னாடி நிலாகிட்ட நல்லதான் பேசி பழகுவாங்க அவளோட அக்காவும் இலக்கியவும் பிரண்ட்ஸ் மாதிரிதான் ஊருக்கு போகும்போது ஒட்டிக்கிட்டு நடபாங்க.

பிரச்சனைகள் வந்தபின்பு முற்றிலும் உறவு முறிந்துவிட்டது. இப்போது நிலாவிடம் அண்ணி என்ற முறையில் மட்டும் பேசிக்கொள்வாள். 

அதனாலதான் நிலாவும் எதுவும் அதிகமாக பேசுவதில்லை,

இலக்கியாவின் பையனை எடுத்துக்கொண்டு மேல சென்றவள் அவனுடன் விளையாடிக்கொண்டு பால்கனியின் அமர்ந்து இருந்தாள்.

நேரமாகவும் இலக்கியா பிள்ளையை வாங்க வந்தவள் நிலாவின் முகத்தினைப்

பார்க்காமல் "அம்மா சொன்னாங்க நீ அண்ணனை விரும்பித்தான் கல்யாணம்  

செயதிருக்கியாம், என்ன அக்கா செய்ததுக்கு தங்கச்சி பரிகாரம் பண்ணவந்தியோ, இப்பவும் அண்ணன் உங்க குடும்பத்து மேல நம்பிக்கை வைத்து உன்னை கல்யாணம் பண்ணிருக்காரு, பாத்து இதுக்குமேல இழக்கறதுக்கு எங்கண்ணங்கிட்ட ஒன்னுமில்லை உயரைத்தவிர, நீயும் அவளும் ஒரே இரத்தம்தான என்று நிருபிச்சுறாத " என வார்த்தைகளை விசமாக அம்பில் தேய்த்து ஏவிவிட்டு சென்றுவிட்டாள்.

அந்த வார்த்தைகளின் கணம் தாங்கமால் அப்படியே பால்கனியில் மடங்கி முட்டியில் தலைவைத்து கதறி அழுதுவிட்டாள் நிலா.

கதிர் இலக்கியா மேல வரும்போதே கவனித்துவிட்டான். பின்னாக வந்தவன் தங்கை பேசியதை கேட்டுமிருந்தான் தங்கையை ஒன்றும் தடுக்கவில்லை அப்படியே வெளியே நின்றுவிட்டான்.

இலக்கியா வெளிய வந்தவள் அண்ணனை பார்த்து திடுக்கிட்டவள்

"அண்ணே அது" என்று தொடங்கவும் கையை காண்பித்து நிறுத்து நீ போ என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.

இலக்கியா கீழே வரவும் சித்ரா அவளிடம் கேட்டார் "நிலாகிட்ட நாளைக்கு நீ ஊருக்கு போறதை சொல்லிட்டியா"

இலக்கியா "ம்ம்".

சித்ரா "நிலா நல்ல அருமையான பிள்ளை முதல்லய அவள கதிருக்கு கேட்ருக்கலாம்னா வயசு வித்தியாசம், அப்போ அவ சின்ன பிள்ளைவேற" என்றார்.

இலக்கியா ஒன்றும் சொல்லாமல் நாங்க கிளம்புறோம் என்று கிளம்பி சென்றுவிட்டாள்.

அவள் விதைத்ததின் பலன் எந்த தப்பும் செய்யாமல் தண்டனை அனுபவித்தாள் நிலா.

கதிர் வந்து மெதுவாக அவளது தோளை தொடவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் தன் கண்ணீரை துடைத்து எழும்பியவள் முகங்கழுவி வந்து கீழே சென்றாள். கதிர் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்தான், அவ ஒன்னுமே நடக்காத மாதிரி போய்விட்டாள்

கிட்சன் சென்று பாலை எடுத்து அடுப்பில் வைக்க, இலக்கியாவை வெளிய வழியனுப்பிட்டு வந்தவர் நிலா 

அங்கு நிற்கவும் என்னடா இப்போ பால் அடுப்புல வச்சிருக்க கதிர் கேட்டானா என வினவவும்.

"இல்லத்தை தலைவலிக்கு அதான் காஃபி போடலாம்னு"

இதுக்கு எதுக்கு தயங்கற என்கிட்ட கேட்டா நா போட்டுத்தரப்போறேன்,.

என்றவர் சட்டென காஃபி போட்டு அவள் கையில் கொடுக்கவும் ,

அவரைத்தான் விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.இந்த மாசற்ற அன்பு கிடைக்கும்போது வேற யாரு என்ன சொன்னா என்ன என்று மனதை சமன் படுத்தியவள் அவரைப்பார்த்து.

ரெம்ப தேங்க்ஸ் அத்தை என்று அவரின் கன்னத்தில் எப்போதும் போல முத்தம் வைத்தவள் மேல வந்தாள்.

பால்கனியில் இப்போது இருட்டை வெறித்துக்கொண்டிருந்த கதிரின் அருகில் சென்று ஒன்றுமே பேசாமல் காபியை ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள்.

கதிரும் அவள் வந்து அமர்ந்ததை கவனித்தவன் திரும்பாமல் அமைதியாக இருந்தவன், மனதில் நிலாவை பற்றியதான எண்ணவோட்டங்கள் எனக்காக எல்லாத்தையும் தாங்கி நிற்கின்றாள் சிறுபெண்ணென்று ஒதுக்கவும் முடியவில்லை பெரியவள் என்று நெருங்கவும் இயலவில்லை 

இனி என்ன என்று சிந்தனையில் .

அத்தியாயம்-4

நிலா பால்கனியிலிருந்து காபியைக் குடித்துக்கொண்டே இருட்டை வெறித்திருந்தாள்.

கதிர் அவளைத் திரும்பிப் பார்க்க அவளது இமையோரங்களில் ஈரம்,

அழுதுக்கொண்டே மேல வந்திருப்பாள் போல. 

இப்படியான சூழ்நிலையும்,

வார்த்தைகளைத் தாங்குறளவுக்கும் அவளுக்கு பக்குவம் கிடையாது. சிறு பெண் என்று வருந்தியவன் அவளது அருகில் இன்னும் கொஞ்சம் நகர்ந்து அமரவும், நிலா அவனைத் திரும்பி பார்த்தாள்.

அவளது கண்களில் கண்ணீர் வரவர துடைத்துக்கொண்டே இருந்தவளைக் கண்டவனுக்கு மனம் வலித்தது. 

சிட்டுக்குருவியாக சிரித்து பறந்தவள் அழறாளே! என்றிருந்தது.

 "நிலா" என்றழைக்கவும் நிமிர்ந்து பார்த்தாள், அழுதியா என்று கேட்கவும் எப்போது கேட்பான் என்றிருந்தாள் போல ஒரு கேவலுடன் மறுபடியும் அழுதாள். அவள் அழவும் இன்னும் நெருங்கி அமர்ந்தவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக்கொண்டான்.

அவன் மெதுவாக அவளது தலையைத் தடவிக்கொடுத்து 

"இலக்கியா பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அவ பேசினது தப்புத்தான் என்றான்"

அவனின் கரங்களில் இருந்தே நிமிர்ந்து பார்த்தவள் அண்ணி பேசினதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கறீங்க.

அவங்க மனசு வேதனையை என்கிட்ட வார்த்தைகளா கொட்டிட்டு போயிட்டாங்க.

அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க என அழுகையூயோடே சொல்லவும், அவனுமே பாவமாக பார்க்க அவன் பார்வையை பார்த்தவள்.

"மாம்ஸ் ஆனாலும் அண்ணி பேசினது ரொம்ப கஷ்டமாக இருக்கு, அதான் அழுதேன், இனி அழமாட்டேன்"என்று சிறுபிள்ளைப்போல புறங்கையால் தன் கண்களை துடைத்து அவனிடம் தன் உதட்டை பிதுக்கி சொல்ல இன்னும் அதிகமாக தனக்குள் இறுக்கிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் அழுகையை விட்டு மெதுவாக அவனிடமிருந்து விலகப்பார்க்க

அவனது இரும்பு பிடியிலிருந்து விலகமுடியவில்லை.

மனைவியின் அருகாமை அவனை என்னவோ செய்தது. இரவு நேரம் ஏற்கனவே மாலையில் நடந்தது வேறு அவனுக்கு மயக்கத்தை தந்திருந்தது.

அவளது நாக்கை கடிக்கிறேன் என்று வாயோடு வாய்வைத்து சண்டைப்போட்டது இப்பவும் இனிக்கின்றது அவனுக்கு.

அவனது கரம் மேலும் அவளை தன் உடலோடு இறுக்க அவளது

அங்கங்கள் நசுங்க மெதுவாக அவனை நிமிர்ந்துப் பார்க்க அந்த களங்கமில்லா முகமும், அந்தக் கண்ணை அகன்று விரிக்கும்போது அவனின் உள்ளுக்குள் பிரவாகமாக உணர்வுகள் பொங்கி எழ, அப்படியே வைத்தக்கண் வாங்காமல் அவளைப் பார்த்தவன், நொடிப்பொழுதில் அவளது அந்த பெரிய நயனங்களில் முத்தமிட இளையவள் அவளின் உடலில் புது இரத்தம் பாய்ந்த உணர்வில் "ஹ"என்று தன் இதழ் லேசாக பிளந்து சத்தம் இட, அப்படியே கண்களில் இருந்து அவனது உதட்டினை எடுத்தவன் லேசாக இதழ்விரித்திருந்த அவளது கிழுதட்டை தன் முன்பற்களால் கடித்து மெதுவாக இழுக்க, அதன் உணர்வு தாங்காது பெண்ணவள் அவனது கரத்தினை பற்றியவளின் தலை பின்பக்கமாக சாய வலது கரங்கொண்டு அவளது தலையை அழுந்த பிடித்தவன், அவளது இதழ்களைத் தன் வாயால் இப்பொழுது மூடிக்கொண்டான்.

அவளது சின்ன வாயிற்குள் தன் நாக்கை நூழைத்து, அவளது நாவின் ருசிபார்க்க தெடங்கினான் இனிப்பின் சுவையோ! இல்லை இன்ப மதுரத்தேனோ! என்று ருசித்துக்கொண்டிருந்தவனின் கண்களில் இளமையின் மயக்கம், அவளுக்கோ உடம்பு அப்படியே அந்தரத்தில் மிதக்கின்ற மாயத்தோற்றம்.

திருமணமாகிய இரண்டாவது நாள், அவளது இடை தாண்டிய கூந்தல் நிறைய மல்லிகைப்பூவினை சித்ரா வைத்துவிட்டிருந்தார். அதுவேறு ஆண்மகனின் உடலின் எழுச்சியைத்தூண்டிக் கொண்டிருக்க அப்படியே அவளை அந்த வெற்றுத்தரையில் பின் பக்கமா சரித்து அவள் மேல் கவிழ்ந்தவனது பாரம் தாங்காது அவள் விழிபிதுங்க...

சற்றே சரிந்து படுத்தான் இப்பொழுது.

சேலை மறைக்காத அவளது வெற்றிடையில் தன் கரத்தை வைத்து அழுத்த பெண்ணவள் துடிக்க...

இன்னொரு கரம் கொண்டு தன் மீதே அவளை சரித்தவன், இடையினூடே சேலைக்குள்ளாக தன் கரத்தை மெதுவாக மேல நகர்த்தி நகர்த்தி அவளது போதையேற்றும் அங்கங்களை அழுந்த பற்றினான்.

உணர்வுகளின் குவியலாக இருந்தவள் தன் இரு கைககளால் அவனது கையைப்பிடித்து தடை செய்யப்போக,

அவனது வலிய கரத்தினை அவளால் விலக்க முடியாமல் தன் பற்களால் உதடு கடித்து மெதுவாக அவனை ஏறிட்டுப்பார்த்து வேண்டாம் என்று தலையசைக்க, அது அவனது வேகத்தை இன்னும் கூட்டி அவளது தாமரை மொக்கை வேகமாக அழுத்திப்பிடிக்க அவனது கையோடு சேர்த்து கவிழ்ந்துப் படுத்துக்கொண்டாள்.

இப்போது கதிரின் கை நிலாவின் இரு தனங்களுக்கிடையே மாட்டிக்கொண்டது,

மெதுவாக அவளது முதுகில் ஆடை மறைக்காத பகுதியில் பூனை முடிகள் தெரிய குனிந்து தன் மூச்சுக்காற்றால் ஊத

பெண்ணவளின் உடல் சிலிர்த்தது, தாடையை வைத்து முதுகில் அழுத்தினான்.

அவனது கையை உருவ முயல அது இன்னும் அவளது பெண்மையை அழுத்தி சோதித்தது.

இப்போது அவளால் எழும்பவும் முடியாது திரும்பவும் முடியாது என்ற நிலையில் 

மெதுவான மெல்லியக்குரலில் மாம்ஸ் விடுங்க என விரும்பியும் விரும்பாமலும் சொல்ல.

தன் முகத்தை எடுக்கவும் அவள் திரும்பி படுக்கவும் சரியாக இருக்க அப்படியே அவளை மறுபடியும் சரிந்து படுக்காதவாறு பிடித்துவைத்திருந்தான்.

அவளது சேலைக்குள்ளிருந்து தன் கையை எடுக்காமலயே தன் மடியில் அவளை இருத்திக்கொண்டு வேகமூச்சுகள் எடுத்துவிட்டவன். இருவரும் சிறிது நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அவனால் சமன்பட முடியவில்லை, அவள் தட்டியெழுப்பியது அவனின் இளமை உணர்வுகளை, தனது 32 வயது இளமை விரதத்தை அவன் முடிக்க நினைத்தான்.

அப்படியே இருந்தவன் தன் நாவினால் அவளது காதில் மென் ஊர்வலம் நடத்த இளையவளவள் கூச்சத்திலும்,

உணர்வினாலும் நெளிந்து கொடுக்க அந்த சுக அனுபவம் இருவருக்கும் புதியது

சட்டென்று அவளது காதுமடலை அவன் கடித்து வைக்க "ஸ்ஸ்ஆஆ" என்று சிறு வலியில் முனங்கியவளின் முன்பக்கம் கழுத்தினூடே தன் கைகளை உள்ளிறக்கியவன் அவளது முன்னழகு அங்கங்களை பிடித்திருந்தான் 

அவனது வேகம் தாங்காது நங்கையவள் பின்னோடு அவன் நெஞ்சில் சாய, அது அவனுக்கு இன்னும் வாகாக போயிற்று.

சிறு பெண்ணவள் அச்சத்தில் தன் கைக்கொண்டு தடுக்க தடுக்க அவனது வேகம் கூடியது இன்னும் நன்றாக இன்னொரு கரம் கொண்டு அவளை அழுத்திப்பிடித்திருந்தான்.

அவளது தாமரையின் மொட்டின் மென்மை இன்னும் வேண்டும் வேண்டுமென்று அவளது சட்டையைக் கழற்ற அது பாதிவழியில் நின்று சதி செய்தது.

அப்படியே அவளைத் தன்பக்கமாக திருப்பி கைபார்த்த மென்மையை அவனது கண்களும் அவனது உதடுகளும் பதம் பார்க்க பெண்ணவளின் முன்கழுத்து மேட்டில் இறங்கி பற்கள் கொண்டும் உதடு கொண்டும், இன்னும் இறங்கி தன் நாவினாலும் முன் அங்கத்தின் மென்மையை அறியமுற்பட்டு முட்டி முயங்கி வாயினாலும் நாவின் ஈரத்தினாலும் அவளையும் அவள் இரு தாமரை மொட்டுக்களையும் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான். அவளது இளமையின் செழிப்பில் தேங்கி நின்று பித்தனானான்.

நங்கையவள் அவனது முரட்டு தாக்குதலில் மிரண்டு விழித்தாளும், உணர்வுகளால் கட்டுண்டு கிடந்தாள்.

அவசரவசரமாக தன் மேல் சட்டையைக் கழட்டியவன் வெற்று உடம்போடு இருக்க அவள் பார்க்க உடம்பு முழுவதும் முடி ஆண்மகனின் நெஞ்சின் முழுவதும் முடி.

அவள் கண்ணெடுக்காமல் அவனைப்பார்க்க அவன் தன் புருவங்களை 

ஏற்றி இறக்கி என்ன என்று வினவ அவள் அவனது நெஞ்சில் தன் கைவைத்து தொட்டு தொட்டுப் பார்க்க அவளது கரங்களை பிடித்து முத்தமிட்டவன்.

அவளது மேல் பகுதி ஆடைய முற்றிலுமாக களைந்தவன் அவன் முழுவதும் ஆடையற்று அவள் முன்பு காமதேவானாக நின்றிருந்தான் பெண்ணவள் தன் கண்களை இறுக மூடியிறுக்க.

அவளது கால்களில் தன் கையை வைத்து அவளது ஆடையை மேலேற்ற வேண்டாம் என்று தடுக்க லேசாக உதடு விரித்து சிரித்தவன் அவளது கையை பிடித்து அவளது வெற்று மார்பை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவன் அவனுக்குள் அவளை கொண்டுவர முயற்சிசெய்ய...

பெண்ணவளுக்கு போராட்டமாக இருந்தது அவளது உணர்வுகளையும் உச்சத்திற்கு தூண்டி விட்டுக்கொண்டிருந்தான்.

நிலா கோழிக்குஞ்சாக வெடவெடுக்க, பயம் அவளது கண்களில் தெரியவும் 

மெதுவாக அவளது கன்னங்களில் முத்தமிட்டு முத்தமிட்டு அவள் தொடைகளுக்குள் தன் காலை புகுத்தியிருந்தான்.

திடீரென சித்ரா 'நிலா' என்று அழைக்கும் மெல்லிய சத்தம் அதை அலட்சியப்படுத்திய கதிர் அவளை அறிந்து ஆண்டுக்கொள்ள துடிக்க.

மிண்டுமாக "நிலா" என்று சித்ரா அழைக்கும் சத்தம் பக்கத்தில் கேட்க அவசரமாக விலகி நிலாவை தூக்கியவன் 

என்ன செய்ய என்று ஒன்றும் ஓடாமல் அப்படியே பாத்ரூமில் நுழைய...

நிலா வேகமாக ஒரு நைட்டியை எடுத்து போட்டுக்கொண்டு கதவு திறக்க சித்ரா நின்றிருந்தார்.

நிலாவின் தலையெல்லாம் கலைந்திருப்பதைப் பார்த்து தப்பான நேரத்துல வந்திட்டமோ என்று எண்ணியவர் "இரண்டு பேரும் பால் எடுத்துக்கல, அதில்லாம கார் இன்னும் வெளிய நிக்குதும்மா, அதை உள்ள எடுத்து விடனும் கதிர்கிட்டச் சொல்லும்மா" என்றவர் கீழே இறங்கிவிட்டார்.

நிலா சிறிது நேரம் கட்டிலில் அமர்ந்திருந்தாள், இன்னும் கைகளின் நடுக்கம் குறையவில்லை, உணர்வின் கொதிநிலையில் இருவரும்.

சிறிது நேரங்கழித்து வெளியே வந்தவன் குளித்திருந்தான். மனைவியின் முகம் பார்க்காமல் கார் சாவியை எடுத்துக்கொண்டு அப்படியே வெளியே சென்றான்.

நிலாதான் அவனுக்காக காத்திருந்தாள்.

நேரம் செல்ல சொல்ல அவன் வராதிருக்கவும். கீழே செல்லுவோமா என்று நினைத்து படியில் இறங்க கணவனவன் படியில் மேலேறி வந்தான்.

இவள் படியில் நிற்பதைப் பார்த்து ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக மேல வா என்று கைகாட்டி சென்றான்.

அவனது நடவடிக்கை அவளுக்கு வித்தியாசமாக பட பின்னாடியே சென்றவள் 

அவன் அருகில் நெருங்கி நிற்க அவனிடமிருந்து மதுவின் வாசனை.

அவன் வாழ்க்கையில் இது இரண்டாவது நாள் மதுவைத் தொடுகின்றான்.

அவளது கன்னத்தை பிடித்து லேசாக வருடியவன் தலையணை போர்வையை எடுத்துக்கொண்டு பால்கனியில் போய் படுத்துக்கொண்டான்.

நிலாவோ திருதிருவென்று முழித்து கலங்கி நின்றாள்...

வெளியே செல்வதற்கு முன் தன்னிடம் எப்படி நடந்துக்கொண்டான். இப்போது எப்படி தலையைப்பிடித்துக்கொண்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தாள் இனிமையான கனவொன்று கலைந்தது போல உணர்ந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாளோ...

அப்படியே சரிந்து மடங்கி தூங்கியிருந்தாள் அதிகாலையில் கண்விழித்தவன் சிறிது தெளிந்திருந்தான் நிலாவை பார்க்கவர அவள் தூங்கியிருந்த நிலையைக் கண்டவனுக்கு பாவமாக இருந்தது.

அவளது கால் கையை நீட்டி சரியாக படுக்கவைத்தவன், அருகில் அமர்ந்து மனைவியை ரசித்தான்.

நிலா இயற்கை அழகி அவங்க வீட்ல எல்லோருமே அழகுதான் அவளோட அண்ணன், அக்கா நித்யா.

அவர்கள் இரண்டுபேரும் நாகரிகத்தின் சாயலைப் பூசிக்கொண்ட மின்னட்டம் பூச்சிகள். அந்த நாகரிகத்தின் சாயல் விழும் முன்பே கதிரை மனதில் உள்வாங்கிக்கொண்டு அவனுக்காக எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கின்றாள்.

மெதுவாக அவளது இதழில் மென் முத்தம் ஒன்றை வைத்து எழும்பி சென்று படுத்துக் கொண்டான்.

அவனை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுதான் மது அருந்தினான். நிலா அவனை முற்றிலுமாக அவளின்பால் விழவைத்திருந்தாள்.

சிறுபெண்ணென்று நினைத்து அவளை எவ்வளவுக்கு எவ்வளவு ஒதுக்கி வைத்தானோ அந்தளவு அவனது இருதயத்திற்குள் ஆழமாக சென்றிருந்தாள் நிலா அதனின் வெளிப்பாடுதான் அவளோடு இணங்கியது.

அப்படியே மனைவியின் நினைவிலேயே மீண்டுமாக நல்லா தூங்கிவிட்டான்.

நல்ல வெயில் சுள்ளென்று முகத்தில் படவும் விழித்து கடிகாரத்தை எட்டிப்பார்த்தான் அது ஒன்பதை தாண்டி மணியைக் காட்டியது.

எழும்பி அறைக்குள் வந்தவன் மனையாளைத் தேடினான்.அவள் அங்கு இல்லையென்றதும் குளித்து உடைமாற்றி கீழே வந்தவன் சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தான், நிலா சமையலறையில் சித்ராவிற்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.

கதிர் வந்ததும் சித்ரா கேட்டார் இப்போ தலைவலி எப்படி இருக்குப்பா பரவியில்லையா என வாஞ்சையாக அவர் விசாரிக்க இது தன்னவளின் வேலை என்று புரிந்தவன் "இப்போ பரவாயில்லைம்மா சரியாயிட்டு இப்போ கொஞ்சம் டீ தாங்க" என்று கேட்டான்.

அவர் டீ போட்டு நிலாவின் கையில் குடுத்துவிட்டார். கப்போடு வெளியே வரும்போது கதிர் அவனது தந்தையை பார்க்க அவரது அறைக்குள் நுழைவதைப் பார்த்து அவன் பின்னோடு சென்றவள் 

அவனது கையில் அதைக்கொடுத்துவிட்டு வெளியேறும்போது வேதநாயகம் மகனிடம் கேட்டார் "இலக்கியா உனக்கு எதோ ஊருக்குபோக டிக்கட் தந்தாளாம். எப்போ கிளம்புற" என்று அறைகுறையாக பேசி கேட்டுவிட்டார் மகனிடம்.

அவனது பதில் நிலாவின் காதில் விழுந்தது

"நிறைய வேலையிருக்குப்பா போகமுடியாது இப்போதைக்கு. இன்னும் பத்து நாளில் காலேஜ் திறந்திரும், பார்க்கலாம்பா" என்றதோடு முடித்துக்கொண்டான். 

வேதநாயகத்திற்கு நிலா என்றால் ரொம்ப பிடிக்கும். அவளது களங்கமற்ற அன்பு அவரையும் கட்டிப்போட்டிருந்தது.

கதிர்- நிலா திருமணத்திற்கு சூத்திரதாரியே அவர்தான். கதிர் போன்ற சுடும் நெருப்பிற்கு நிலைவைப்போன்ற குளிர்தென்றலாகியா நிலாவே சரியாக இருப்பாள் என்று கணித்தார்.

கதிரின் பதிலைக் கேட்டவளுக்கோ என்ன உணர்கின்றாள் என்று சொல்லத்தெரியவில்லை, அவனுக்கு விருப்பமில்லாமல் தேன்நிலவில போய் என்ன பண்ண என்று அவளது அறையில் அமைதியாக இருக்கவும், மொபைலின் அழைப்பு சத்தம், எடுத்துப் பார்த்தவள்

பேசவா வேண்டாமா என்ற யோசனையில் இருக்க, அழைப்பு நின்றுவிட்டது.

சிறிது நேரங்கழித்து மறுபடியும் அழைப்பு வந்தது, எடுத்து மெதுவாக மறைவில் நின்று பேசியவள் திரும்பி பார்க்க அங்கு கதிர் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் நிலா பேசாமல் மொபைலைக் கையில் வைத்துக்கொண்டு நிற்க அந்தபக்கமிருந்து"ஹலோ ஹலோ" என்று தொடர்ந்து கூப்பிடும் சத்தம்.

யாரு என்று அவன் கேட்கவும் பதில் சொல்லாது, என்ன பதில் சொல்ல என்று நின்றிருந்தவளின் கையில் இருந்து மெபைலை வாங்கிப் பார்த்தவன் அதிலிருந்த பெயரை பார்த்ததும் மொபைலை தூக்கி எறிந்தான்.

அது இப்போது உயிரோடு இல்லை, சிறு சிறு துண்டுகளாக சிதறி தன் உயிரை விட்டிருந்தது.

அவனின் கோவம் கண்டு விக்கித்து நின்றாள் நிலா.

அத்தியாயம்-5

மொபைலைத் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு நேராக மொட்டை மாடிக்குச் சென்றவன், நல்ல சுடு வெயிலில் நடந்து கொண்டிருந்தான் கோபந்தீர நடந்தான்.

நிலாவிற்கோ பயம், சிறிது நேரம் அப்படியே நின்றவள் உடைந்த பாகங்களை எடுத்து பார்த்துவிட்டு சரி செய்யமுடியாது என்று குப்பையில் போட்டவள் . சென்று சித்ராவோடு வெளியே வராண்டாவில் அமர்ந்து அமைதியாக மாமியார் செய்யும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

யாரோ வெளியே நின்று அழைப்பு மணியை அழைக்க வெளிகேட்டினை சித்ரா திறந்தார் அங்கு நிலாவின் அம்மா ஜோதி நின்றிருந்தார்.

நிலாவிற்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை,உள்ளே அழைக்கவா வேண்டாமா என்று திணறிக்கொண்டு நின்றாள்.

சித்ராவிற்கு நிலாவின் வீட்டில் நடந்தது ஒன்றுமே தெரியாது, அவர் ஜோதியை உள்ளே அழைத்துச் சென்றார்.

நிலாவிற்கோ பயம் கதிர் எதுவும் சண்டைப்போட்டால், ஐயோ என்று உள்ளே ஓடியவள் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டாள், அவளது இதயம் திக் திக்கென்று பயத்தில் அடித்துக்கொண்டிருந்தது.

சித்ரா உள்ளே செல்லவும் "என்னம்மா, இங்கயேன் வந்தீங்க, நேத்து நான் சொல்லிட்டுத்தான வந்தேன் என்று கேட்கவும்"

அவருக்கு வருத்தமாகப்போயிட்டு நல்லவரவேற்பு தர்ற, உன் வீட்டுக்கு வந்தா இப்படித்தான் ஏன் வந்தனுக் கேட்பியா. நேத்து கோபத்தில மருமகன் 

உன்னை அழைச்சிட்டு வந்திட்டாரே, என்ன ஏதுனு பயந்து உனக்குப் போன் பண்ணேன், போன் போகலை அதான் நேர்ல பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்.

உன் போன் என்னாச்சு? என்று கேட்கவும் நிலா அது கீழ விழுந்து துண்டுத்துண்டா உடைஞ்சிட்டுமா, சரி பண்ணமுடியாது.

மெதுவாகக் குனிந்து என்னடி அக்கா உன்கிட்ட போனில் பேசும்போது மருமகன் கேட்டுட்டாரா நித்யா எனக்கு சொன்னா, ரொம்பக் கோவப்பட்டாரா? அவர்தான் போனை உடைச்சிட்டாரோ? என பயந்து பயந்து பேசியவர் ஒரு தாயாகத் தன்னுடைய பெண்களின் வாழ்க்கை நல்லாயிருக்கணுமே என்ற ஆதங்கம் இருந்தது.

நிலா மெதுவாகத் தலையசைத்து ஆமாம் என்று பதிலுரைத்தவள். மேல மாடியைத்தான் பார்த்திருந்தாள், அடுத்த என்ன வரப்போகுதோ, எனக்கு கல்யாணம் முடிந்து மூணு நாள்கூட ஆகவில்லை அதுக்குள்ள இத்தனை பிரச்சனையா.

இந்த நிலா தாங்கமாட்டாள் கடவுளே, கொஞ்சம் இரக்கங்காட்டுங்க என்று மனதில் நினைக்கவும், அவளது நாயகன் படியில் இறங்கிவரவும் சரியாக இருந்தது.

இறங்கி வந்தவன் "வாங்கத்தை எப்படி இருக்கீங்க, மாமா அத்தான் எல்லாரும் நல்லாயிருக்காங்களா, என்ன திடீர்னு வந்திருக்கீங்க நிலா ஞாபகம் வந்திட்டுதோ" என்று கதிர் அவரிடம் பேச்சுக்கொடுக்க.

ஜோதிக்கும் நிலாவிற்கும் என்ன பேசவது என்று தெரியாமல் வாயடைத்திருக்க, சித்ரா சமையலைறயிலிருந்து இருந்து வந்தவர் கதிரின் சத்தம் கேட்டதும் அவனுக்கும் சேர்த்து டீ எடுத்து வந்துவிட்டார்.

ஒன்றுமே நடவாததுப் போல சித்ராவின் முன் காண்பித்துக் கொண்டான். எந்த சூழநிலையிலும் மற்றவர்களை மரியாதைக் கேடாக வேதநாயகமும் சித்ராவும் நடத்தமாட்டார்கள்.

கதிர் ஒரு கப்பை எடுத்தவிட்டு நீங்களும் எடுத்துக் குடிங்கத்தைச் சூடு ஆறிடப்போகுது என்று சொல்லவும், ஜோதி எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கவும்.

சித்ராதான் குடிங்க அண்ணி, அங்க அண்ணன் எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்டு அருகில் அமர்ந்துக்கொண்டார்.

ஜோதியின் முள்மேல் நிலை அவனின் முகத்தில் புன் முறுவலைக் கொண்டு வந்தது. மெதுவாக எழும்பியவன் நீங்க பேசிட்டிருங்க என்றவன் மேல செல்ல படிகளில் ஏறியவன் நிலாவைத் திரும்பிப் பார்க்க, அவளும் அவனைத்தான் ஏறிட்டுப் பார்த்தாள். 

கைகளினால் மேல வா என்று சைகைச் செய்தவன் சென்றுவிடவும், நிலாவும் நழுவி மேலே சென்றவள் கணவனின் முன் நின்றாள்.

சித்ராவும் ஜோதியும் பேசிக்கொண்டே வேதநாயகத்தின் அறைக்குள் சென்று அவரை நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

கதிர் நிலாவிடம் "என்ன என் மாமியார் இங்க வந்திருக்காங்கனா எதாவது காரணம் இருக்குமே, என்னாவாம்" என விசாரிக்கவும்.

அவள் அமைதியாகக் கட்டிலில் அமர்ந்தாள்.அவன் அப்படியே பின்பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டான். காலையிலயே உங்கம்மாவுக்கு தகவல் ஜெட் வேகத்துல பறந்திருக்கும், அதான் பதறி வந்திருப்பாங்க... எனச் சிரித்தவன்,

நான் கீழப்போறேன் என்று எழுந்தவளை

அமைதியாகப் பார்த்திருந்தான். நிலா இப்பொழுதும் சேலைக்கட்டியிருந்தாள். 

தலைநிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள், அதன் வாசம் அறையெங்கும் நிறைந்திருக்கக் கதிரின் கோபம் இப்போ மட்டுபட்டிருக்க அந்தச் சூழ்நிலையை ரசித்துப் பார்த்திருந்தவன். நிலா எழும்பவும் சட்டென்று பின்பக்கமாகப் அவள் முந்தானையை பிடித்து இழுத்தான் அப்படியே அவன் மேல் பின்பக்கமா சரிந்து விழுந்துவிட்டாள்.

பஞ்சுமூட்டை மேல விழுந்ததுப்போல அவன் உணர்வை பிரதிபலித்தான்.

அவள் சட்டென்று எழும்ப முயற்சிக்க முடியவில்லை, அவள் திரும்பிப் படுத்தாள் மட்டுமே எழும்ப முடியும், திரும்பியவளின் 

முன் அங்கமெல்லாம் அவன் மேல உரச கதிரின் கை அவளது இடையோடு சேர்த்துப்பிடித்து அவனோடு இன்னும் இறுக்கிக்கொண்டான்.

பெண்ணவளுக்கோ விலக மனமில்லாமல் அவனது முகத்தை ஏறிட்டுப்பார்க்க, புருவம் உயர்த்தி ‘என்ன’ என்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையாட்ட......

என்ன ஒரு கவித்துவமானக் காட்சி அது மதுவின் போதையைவிட இந்த மாதுவின் போதையைத்தான் சமாளிக்க முடியாமல் நேற்றிலிருந்து தடுமாறுகின்றான் காளையவன் .

இந்தப் போதையில் விழுந்தவன் எழுந்ததாகச் சரித்திரமில்லை அது ராஜபோதை, மெதுவாக அவளது கன்னத்தை அழுத்தி பிடித்து இழுத்தவன்.

உங்கம்மா போனதும் கிளம்பி இரு நம்ம வெளியேப் போகலாம், சரியா என கேட்கவும் சரியென தலைசைத்தவள்.

இறங்க முற்பட முடியவில்லை அவளது சேலை முந்தானை முழுவதும் அவனது கைககளில் என்ன என்று அவள் திரும்பி பார்க்க"ஒரு அம்மாவின் தவிப்பு எனக்கும் புரியும், உங்கம்மா இங்க வந்து உன்னை பார்த்திட்டுப்போறதுக்கு எல்லாம் நான் ஒன்னும் சொல்லமாட்டேன் ஆனா.....

அவங்களோட குணம் இங்க உனக்கு ஒட்டாம இருந்தா சரி. போ உன்னைப் பார்க்கதான வந்தாங்க அவங்கிட்ட பேசி மதியம் சாப்பிட்டுட்டு போகச்சொல்லு. என்றவனை விழி எடுக்காமல் பார்த்திருந்தாள்..

என்ன என்று அவன் கண்களால் வினவ அவனது நெஞ்சினில் கைவைத்து “என்னோட கதிர் மாம்ஸ் திரும்பி வந்திட்டாங்களோனு பார்த்தேன்”என்றவள் நொடிப்பொழுதில் அவனது உதட்டினைத் தென்றலாக தீண்டி இறங்கி ஓடிவிட்டாள்.

கையில் எப்போதும் சந்தோசம் என்ற மந்திரக்கோலை வைத்திருக்கும் என் மாயக்காரி என்று நினைத்தவன். அவனது இதயத்தில் அவள் தேவதையாக நுழைந்த நாளை கண்களில் ரணவேதனையைத் தேக்கிக்கொண்டு நினைத்திருந்தான்.

அந்த நாளை மறக்க நினைத்தாலும் அவளின் தேவதைக்காக அந்த நாளை நினைவு படுத்திக்கொள்வான்.

அப்படியே படுத்திருந்தவனின் கண்களின் அலைப்புருதல் நின்று தன்னையறியாமலயே நித்திரைக்கொண்டான்.

அம்மாவோடு இப்போது நிலா பேசிக்கொண்டிருந்தாள் கணவன் என்ன சொல்வானோ என்ற பயமின்றி, சாப்பிட சொல்லவும் அவர் மறுக்க உங்க மருமகன்தான் சாப்பிட்டு போகச் சொன்னாங்க, இதுக்கு அப்புறம் எப்படி வீம்புபிடிச்சுப் போகமுடியும் மகளின் உறவு அவர் காலத்திற்கும் வேண்டுமே என்று அமர்ந்து பெயரளவுக்குச் சாப்பிட்டு எழும்பியவர் சித்ராவிடமும் வேதநாயகத்திடமும் சொல்லிவிட்டு கிளம்பினார், பின்னோடு சென்ற மகளிடம் கன்னத்தைப்பிடித்துக் கொஞ்சியவர் பொருத்துப்போடா, கவனமாயிரு அப்பாகிட்ட சொல்லி புது மொபைல் வாங்கித்தரச் சொல்றேன் என்றவருக்கு கண்ணீர் வந்தது, அவர்கள் வீட்டீன் கடைசி செல்ல வாரிசல்லவா.

வேண்டாம்மா மாம்ஸ் வாங்கித்தருவாங்க என்று சொல்லவும், ஒரு அம்மாவாக கண்டித்தார் இனி மாம்ஸ் அப்படி இப்படினுலாம் கூப்பிடாத நிலா. அது நாலு பேருக்கேட்கும்போது மருமகனுக்கு மரியாதையா இருக்காது, இங்க மாதிரி "மாமா" எனச்சொல்லு இல்லனா அவங்க வழக்கப்படி எப்படினு கேட்டு மரியாதையக்குடு, சரியா நீ இன்னும் தென்னவன் வீட்டு பிள்ளையில்லை.

வேதநாயகம் வீட்டு மருமகள் என்றவர்.அவளது கையைப்பிடித்துத் தட்டிக்கொடுத்தவர். சித்தார்த் வெளியேதான் வண்டியில் இருக்கான் என்ன அழைச்சிட்டுப்போக, நான் வர்றேன் என்று சென்றுவிட்டார்.  

அம்மா சென்றதும் சிறிது மனக்கத்திலயே வந்தவள் அப்படியே வெளியில் போட்டிருந்த திண்டில் அமர்ந்துவிட்டாள்.

சித்ராதான் அவளது அருகில் வந்து என்னம்மா அம்மா வந்திட்டுப்போனதும் ஒருமாதிரியா இருக்குதா...

எல்லாப் பெண்களுக்கும் உள்ளதுதான்,

கொஞ்ச நாள்ல சரியாயிடும், கதிரை எழுப்பிச் சாப்பாடு குடுத்திரும்மா இல்லனா இன்னும் தலைவலிக்கும் என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

மெதுவாக எழும்பியவள் தங்களது அறைக்குள் செல்லும்போது கதிர் நல்லத்தூக்கத்தில். எழுப்பவா? வேண்டாமா? என்று கட்டிலின் அருகில் நின்றவள் தூங்கும் அவனைத்தான் ரசித்துக்கொண்டிருந்தாள்.

காற்றாய் எனை எங்கிருந்தோ மீட்டினாய்.

உன் அருகிருந்தும் மீட்டிடாத யாழாக

நான்!!!

நேற்று அவளிடம் அவன் காட்டிய நெருக்கம் என்ன என்று எண்ணியவளுக்கு, 

ஹா....ஆனந்த பிரவாகமாக உணர்வுகள் பொங்கி எழத்தான் செய்தது.

கண்களில் ஒருவித மயக்கம் கலந்த கிறக்கம். நேற்று அவன் கண்களில் அவள் கண்டது காமம் இல்லை,உயிரில் ஊடுருவிச்செல்லும் காதலோடு சேர்ந்ததொரு தேடலது.

அவன் நடந்துக்கொண்டாதிலிருந்து அவள் உணர்ந்தது, அவனுக்கான தேடல் அவள் மட்டுமே, கதிர் பெற்றோருக்காக என்றாலும், அவன் பிடிவாதம் பிடித்திருந்தால் இந்தக்கல்யாணமே நடந்திருக்காது.

அவனுக்குள்ளும் சில சொல்லமுடியாத உணர்வுகள் உண்டு, அதனாலே இந்தக்கல்யாணம் சாத்தியப்பட்டது.

அவனது உள்ளுனர்வு மனையாளை உணர்ந்ததோ என்னவோ விழித்துப்பார்த்தான், மனையாள் அவனையே வைத்தக்கண் வாங்காமல் ஒருவித மயக்கப்பார்வை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவன், நிலா என்றழைத்ததும் தன்னுணர்வுக்கு வந்தாள்.

அது அத்தை சாப்பிட கூப்பிட்டாங்க, அதான் வந்தேன் நீங்க தூங்கிட்டிருந்தீங்க, அதான் எழுப்பாவா? வேண்டாமா? என.....

அவள் வார்த்தையை முடிக்கூடவில்லை அவன் ஒரு மாதிரி சிரித்தான், நான் உன்னைக் கண்டுக்கொண்டேன் என்று.

அவன் முகம்பாராது வேறுபக்கம் திரும்பி நான் கீழப்போய் எல்லாம் எடுத்துவைக்கிறேன் நீங்க வாங்க என படபடவெனச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவந்துவிட்டாள் 

கதிர் கீழே வரவும் இருவரும் சாப்பிட்டு முடித்ததும், சீக்கிரம் கிளம்பு வெளியப்போயிட்டு வந்திடுவோம் என்றான்

அவன் முதலாவதாகக் கிளம்பி சித்ராவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க உடைமாற்றி வந்தவளைப் பார்த்தவன் என்ன சொல்ல என்று நிதானித்தான். வெளியேப் போவதினால் ஜீன்ஸ் குர்தியில் வந்தாள், அது அவளைச் சிறுபெண்ணென்று காண்பித்தது.

சித்ரா இருந்ததினால் ஒன்றும் சொல்லவியலாது, கண்களாலே அதிருப்தியைக் காண்பித்தவன்,

தலையை ஆட்டி வேறு உடை மாற்று என்று சைகை செய்யவும் திரும்பி மேலச்செல்ல, சித்ரா பிடித்துக்கொண்டார் 

ஏன் திரும்பவும் மேலப்போற, நேரமாகிட்டுத்தான கிளம்புங்க என்று சொல்லவும், நிலா கதிரைப்பார்க்க  

"வா போவோம்" என்று சொல்லி சட்டென்று வெளியே சென்றுவிட்டான்.

நிலாவிற்குக் கணவன் என்ன சொல்லுவானோ என்று பயந்து தயங்கி மெதுவாக வரவும் அவன் தன் பைக்கை எடுத்திருந்தான்.

பின்பக்கம் இரண்டுபக்கமும் கால் போட்டு பின்னாடி உட்கார்ந்து கொண்டவள் தாரளாமாக அவன் தோளோடு கைப்போட்டு ஒட்டி அமர்ந்துக்கொண்டாள். அவள் முன்னழகு முழுவதும் அவன் முதுகோடு ஒட்டி அவனை சோதித்தது. 

"போகலாம் மாம்ஸ்" என்று சொன்னவள், நாக்கை கடித்துக்கொண்டு, சாரி "மாமா"

இப்படிச் சொல்லவும், அவன் திரும்பிப்பார்த்து என்னவென்று கேட்கவும்,

அது அப்புறமா வந்து சொல்றேன் என்றதும் வண்டியை கிளப்பினான்.

 அரைமணி நேரங்கழித்து வண்டியை ஒரு பிரபலமான செல்போன் கடையின் முன் நிறுத்தினான், நிலாவுக்குத் தெரியும் அவனது குணம் அதனால் எப்படியும் மொபைல் வாங்கித்தருவான் என்று எதிர்பார்த்தள், ஆனால் இன்றைக்கேவா ஆச்சர்யம்.

இரண்டுபேரும் உள்ளே சென்றதும் என்ன விலையில் வேணும் என்று கடையில் கேட்க, கதிர் திரும்பி அந்தப் உடைஞ்ச மொபைல் எவ்வளவு என்று நிலாவிடம் கேட்க, அவள் அது இருபத்தைந்தாயிரம் என்றாள்.

உடனே கதிர் கடை ஊழியரிடம் ஒரு முப்பதாயிரத்திற்கு மேல் நல்லதா காண்பிங்க என்றதும், நிலா அப்படியே திரும்பி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள், “தென்னவன் மகளுக்குச் செய்ததைவிட நான் என் மனைவிக்கு அதிகமா செய்யனும்” என சொன்னான்.

நிலா "இவ்வளவு அதிகமா வேண்டாம்"

கதிர்"பழைய கதிர்னு நினைச்சு வேண்டாம்னு சொல்றீயா" என அடிக்குரலில் கேட்க.

பதறியவள் "அப்படி இல்ல மாமா"என்றவள் தகப்பன் பெண்பிள்ளைக்குச் செய்றதுல கணவன் போட்டிபோடலாமா.

அவங்களுக்கெனப் பிள்ளை வரும்போது புரியும் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.

அப்போ நான் சொல்ற விலையிலையே வாங்கு எனப் பார்க்க ஆரம்பித்தான் அவன் அங்குப் பணியிலிருந்தவரிடம் எல்லா விபரங்களையும் கேட்டுக்கேட்டு ஒன்றைத் தெரிவு செய்தவன், அவளுக்கு பிடிச்சிருக்கா என்று கேட்டு அவளுக்குப் பிடித்தமாதிரி வாங்கிக்கொண்டு வெளியே வரவும், அவளைப் பிடித்து நிறுத்தி, என் சம்பளம் இப்போ எவ்வளவு தெரியுமா?

என்று வினவ. தெரியாது எனத் தலையசைத்தாள்.

"ஓன்றரை இலட்சம் ருபாய், நான் நிறையக் கல்லூரியில கெஸ்ட் லெக்ட்சரரா வேறப் போறேன், எனக்கு மணிக்கு இவ்வளவுனு கிடைக்கும், உங்க அக்கா மாப்பிள்ளைய விட இரண்டு மடங்கு. அவனை ஏன் ஒப்புமைபடுத்திச் சொன்னேனு உனக்குப் புரிஞ்சிருக்கும்,

நான் உங்கப்பா மாதிரியில்ல, உழைச்சு சம்பாதிக்கிறேன்"

ஆம் நிலாவின் தந்தை பைனான்ஸ் என்கின்ற பெயரில் வட்டித்தொழில் நடத்துகிறார்.

சிறிதுநேரம் அப்படியே நின்றவன்"உனக்கு எங்கயாவது போகணும்னு ஆசையா இருக்கா, போகனுமா என்று கேட்கவும் தலையை மேலும் கீழும் ஆட்டி சொல்ல சிரித்துவிட்டான்.

முதல் நாளே என்ன மிரட்டின அந்த நிலாவ எங்க? காணமா பேயிட்டாளோ!

அதற்கும் அவள் ஆமா என்று தலையாட்ட

சிரித்தவன், வாயாடி நீ பேசாமயிருந்தாலும் கஷ்டமா இருக்கு, வாயத்திறந்து பதில் சொல்லு என்றதும்.

"கோயிலுக்குப் போகணும், முதன் முதலா கல்யாணம் முடிஞ்சு சேர்ந்து வந்திருக்கோம் கூற, யோசித்தவன் சரி உனக்காக வர்றேன், அங்கவந்து அது இதுனு என்கிட்ட சொல்லக்கூடாது.

சொல்லமாட்டேன் ஆனா நான் கோயிலுக்குள்ள எங்கலாம் போறனோ என்கூட பக்கத்துல வந்து நின்னா மட்டும் போதும், சாமி கும்பிடும்போது தம்பதியா சேர்ந்துதான் நிக்கனும் அதானலதான் சரியா என்று தலைசாய்த்து சொல்லவும் , சிரித்துவிட்டான்.

சரிவா என்று கோவிலுக்கு அழைத்து சென்றான்

வேதநாயகத்திற்கு இப்படி ஆனதிலிருந்து அவன் அறவே வெறுத்துவிட்டான் கோவிலுக்குச் செல்வதை.

அதனால் இப்படியாவது கோவிலுக்கு வர்றாங்களே என அவளும் சம்மதித்துதான் சென்றாள். 

மாலைநேரமானதால் நல்லதொரு அமைதியான சூழ்நிலை கோவிலில்.

அப்படியே பூஜைக்கும் கொடுத்தவிட்டு,தெய்வ சந்நிதியில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

சிறிது ஓய்வு எடுத்துவிட்டு சாப்பிட செல்ல சித்ரா வந்தவர் "கதிரு அப்பா உங்கிட்ட எதோ பேசனும்னு சொன்னாங்கப்பா, பேசிட்டு வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றதும், அவன் அங்குச் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தான்.

வந்தவனின் முகமே சரியில்லை, சித்ராவிற்குக் கணவன் என்னப் பேசியிருப்பார் என்று தெரியும் கணவனுக்கு அடங்கிய மனைவியாக இப்பவும் நடந்துக்கொள்கிறார்.

அடுத்த நாள் காலையில் பெரிய வண்டி ஏற்பாடு செய்து நான்கு பேரும் மதுரையை நோக்கி பயனப்பட்டிருந்தனர்.

முந்திய நாள் இரவு கதிரை அழைத்தவர்

" எனக்கு இங்க இருக்க மூச்சு முட்டுது,

ஊருக்கு அனுப்பிவை எப்பவும்போல என்றார்" ஆமா இது வழக்கமா நடக்குறதுதான்.

அவனைப் பார்க்கணும் என்று தோன்றினால் மகனை அழைத்துச் சொல்லிவிடுவார் சித்ரா, அவன் இங்கிருந்தே எல்லா ஏற்பாடும் செய்து வர வைத்துவிடுவான். வந்து ஒரு வாரத்தில் திரும்பவும் ஊருக்கு போகணும் என்பார் இப்படியாகத்தான் மூன்று வருடங்கள் நடந்திருக்கு.

அவனும் ஊருக்கு சென்று கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.

நிலாவிற்கு ஊருக்கு என்று சொன்னதும் அவனை முதன் முதலாகப் பார்த்த அந்த நிமிடங்களின் ஞாபகம்.

கதிருக்கோ அங்கிருந்து என்ன சூழ்நிலையில், எதற்குப் பயந்து சென்னைக்குக் கிளம்பி வந்தான் என்ற 

நிகழ்வுகளின் ஞாபகம்...